states

img

கிருஷ்ணா, புடமேரு நதிகளை கண்காணிக்காமல் விட்டதால் பேரழிவு

விஜயவாடா கடந்த மாத இறுதியில் வங்கக் கடலில் உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் கார ணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கா னா மாநிலங்களில் கனமழை புரட்டியெடுத்தது. இந்த கனமழை யால் இரு மாநிலங்களிலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலை யில், பல லட்சம் பேர் அகதிகளாக நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்தனர். மேலும் பல ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகிய நிலையில், பல நூறு கி.மீ வரை சாலைகள் அடித்து செல்லப் பட்டன. தெலுங்கானா மாநிலம் இயல்புக்கு திரும்பியுள்ள நிலை யில், ஆந்திராவின் பெரும்பாலான கிராமங்களில் வெள்ளம் வடியாத நிலையே உள்ளது. மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டே இருப்பதால் இயல்பு நிலையை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

மூழ்கிய விஜயவாடா நகரம்

மலைகளைக் கொண்ட நகர மான விஜயவாடாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் (ஆகஸ்ட் 30-31) 26 செ.மீ. அளவில் மழை வெளுத்து வாங்கி யது. இதனால் விஜயவாடா நக ரமே வெள்ள நீரால் உருக்குலைந் தது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2,000 ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. 250-க் கும் மேற்பட்ட கால்நடைகள் உயி ரிழந்தன. 500-க்கும்மேற்பட்ட ரயில் கள் ரத்து செய்யப்பட்டதால், பய ணிகள் பெரும் அவதிக்குள்ளாயி னர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 3.5 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர். கிட்டத்தட்ட பேரழிவு துய ரத்தை சந்தித்துள்ள விஜயவாடா நகரம் இன்னும் இயல்புநிலை திரும்ப முடியாமல் திணறி வருகின்றது.

கணிப்பை கோட்டை  விட்ட ஆந்திரா அரசு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான பொழு தே இந்திய வானிலை ஆய்வு மையம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா நகரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் முன்னரே விஜயவாடா நகரத்தில் பாயும் கிருஷ்ணா நதி மற்றும் புடமேரு நதிகள் நல்ல நீர்வரத்துடன் ஓடிக் கொண்டு இருந்தன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையை உன்னிப் பாக கவனித்து, காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் முன்னரே ஆந்தி ராவின் ஸ்ரீசைலம் அணையில் (கிருஷ்ணாவின் அணை) நீர் ரத்தை முன்கூட்டியே அதிகரித்து  இருந்திருந்தால் விஜயவாடா இவ்வளவு பெரிய சேதத்தை சந்தி த்து இருக்காது. ஆனால் எந்த முன் னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், ஸ்ரீசைலம் அணையை யும், புடமேரு ஏரியையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டது ஆந்திர அரசு.

அதனால் கிருஷ்ணா நதியில் இதுவரையில் இல்லாத அளவாக வினாடிக்கு 11 லட்சத்து 35 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஒரு வினாடிக்கு இவ்வளவு தண்ணீர் பாய்ந்த நிலை யில் ஆற்றங்கரை ஓரம் இருக்கும் விஜயவாடா தப்பமுடியாமல் மூழ்கியது. அதே நேரத்தில் புட மேருவில் இருந்து பாய்ந்த 45 ஆயிரம் கன அடி நீர் நகருக்குள் நுழைந்து தனியாக ஆட்டம் காண் பிக்க விஜயவாடா சின்னாபின்னமா னது. இதில் புடமேரு நதி கொண்டு வந்த அச்சுறுத்தல் மிகப்பெரியது ஆகும். விஜவாடாவின் அஜித் சிங் நகர், ஸ்ரீராஜராஜேஸ்வரி பேட்டை, அருணோதயா காலனி, ராமகிருஷ்ணாபுரம், ஜக்கம்பூடி, ஒய்எஸ்ஆர் காலனி, கண்ட்ரிகா, நுன்னா, பயக்காபுரம் போன்ற உள்பகுதிகளை புரட்டியெடுத்து விட்டது.

ஒரே நேரத்தில் கிருஷ்ணா, புட மேரு நதிகளை திறந்துவிட்டது தான் விஜயவாடா பேரழிவிற்கு காரணம் என என்டிஆர் மாவட்ட ஆட்சியர் ஜி.ஸ்ரீஜனா வெளிப்படை யாக ஒப்புக்கொண்டுள்ளார். மழை ஒருபக்கம் விஜயவாடாவை பாதித் தாலும், பேரிடர் அளவுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு அணைகளை கண்கா ணிக்காததே  காரணம் ஆகும்.  அதாவது ஆந்திர அரசின் அலட்சி யத்தாலும் விஜயவாடா மூழ்கி யுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீதான பழிவாங்கல் நடவடிக்கை யில் அதிகம் கவனம் செலுத்தாமல் மக்கள் நலனில் சந்திரபாபு - பாஜக கூட்டணி அரசு கவனம் செலுத்தி இருந்தால் விஜயவாடா இவ்வளவு பெரிய சேதத்தை சந்தித்து இருக்காது என்பது குறிப் பிடத்தக்கது.